இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு டெல்லியில் நேர்ந்த கொடுமை!

புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் ஒருவர், டெல்லியில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.

டெல்லி சாணக்கியபுரி பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திரவிடுதி ஒன்றில், தனியார் நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக அதிகாரி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அப்பெண் அளித்த புகாரையடுத்து, காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

கடந்த 2023 செப்டம்பர் 14ஆம் தேதி, அப்பெண்ணுக்கு இக்கொடுமை நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த ஆடவர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் நிறுவனத்தில் தான் உதவித் தலைமை மேலாளராகப் பணியாற்றி வந்ததாக அப்பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தன் உறவினருக்கு அந்த ஆடவரைத் தெரியும் என்றும் தனக்கு அவ்வேலை கிடைக்க அவர் உதவினார் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்துவருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!