தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானின் ஏவுகணையை நடுவழியில் மறித்து சுக்குநூறாக்கியது இந்தியா

1 mins read
439dd913-7173-47bd-be7e-ab139f235163
பஞ்சாபில் வயல் பகுதியில், சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணையின் பாகங்கள். - படம்: ஊடகம்

சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு புதன் (மே 7) இரவு இந்தியா மீது ஏவுகணையால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது.

பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது.

ஞ்சாப் எல்லையில் ட்ரோன், ஏவுகணைகளை துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி சுக்கு நூறாக்கியது.

தற்போது பஞ்சாபில் வயல் பகுதியில், சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் கிடக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்