கொல்கத்தா: ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த விமானிக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்ததால் வழியிலேயே கொல்கத்தாவில் விமானம் தரையிறங்கி பயணியை இறக்கிவிட்டு, பின் பறந்தது.
கனடாவின் வான்கூவரில் இருந்து தலைநகர் புதுடெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் வந்துகொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த டெல்லியைச் சேர்ந்த தல்பீர் சிங் (70) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அந்த விமானம் கொல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்டு அங்கு தரையிறங்கியது.
விமானத்தில் இருந்து தல்பீர் சிங் இறக்கிவிடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே விமானம் 176 பயணிகளுடன் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றது.

