தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏமனில் மரண தண்டனை எதிர்நோக்கும் கேரள தாதியைக் காப்பாற்றக்கோரிய வழக்கு ஏற்பு

2 mins read
df2bd3f3-799b-4d0e-bc94-d4e7d2a6663f
ஏமன் நாட்டில் கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை எதிர்நோக்கும் கேரள மாநிலத்தின் தாதி நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதற்கான வழி இன்னும் உள்ளது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அவரது குடும்ப வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன். - படங்கள்: ஊடகம்

புதுடெல்லி: ஏமனில் கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த தாதியைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அனைத்துலக நடவடிக்கை மன்றம் என்ற அமைப்பின் சார்​பில் வழக்​கறிஞர் சுபாஷ் சந்​திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணையின் முடிவில், நிமிஷா பிரியாவுக்கு 2020ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023ல் நிராகரிக்கப்பட்டது.

தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலை​யில் பிரியாவுக்கு சட்​ட​பூர்​வ​மாக உதவ அனைத்துலக நடவடிக்கை மன்றம் சார்​பில் வழக்​கறிஞர் சுபாஷ் சந்​திரன் உச்ச நீதி மன்​றத்​தில் வியாழக்கிழமை முன்னிலையானார்.

அப்​போது, நிமிஷா பிரி​யாவைக் காப்​பாற்​று​வதற்​கான அரசதந்திர வழிகளை மத்​திய அரசு விரைந்து ஆராய வேண்டும் என்று உச்​ச நீ​தி​மன்​றத்​தில் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்​து, இரண்டு நீதிபதிகள் அடங்​கிய அமர்வு இந்த வழக்கு ஜூலை 14ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று அறிவித்தது.

இந்த வழக்கில், ஷரி​யத் சட்​டத்​தின்கீழ் இறந்​தவரின் குடும்​பத்​துக்கு இழப்பீடு வழங்கு​வதன் மூலம் குற்​ற​வாளி மன்​னிக்​கப்​படலாம். இந்த முறையைப் பின்​பற்றி கேரள மாநிலத்தின் தாதியர் பிரியாவை மீட்க மத்​திய அரசு சார்​பில் நடவடிக்கை எடுக்​கும்​படி வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்