புதுடெல்லி: இந்தியாவில் அண்மையில் ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது காவல்துறையினரின் அடக்குமுறை, வரம்பு மீறிய செயல்கள், பெண் போராட்டக்காரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் அடங்கிய பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 18ஆம் தேதி விசாரித்தது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், “நீட் போராட்டம் தொடர்பாக எழுந்துள்ள அனைத்து விதமான பிரச்சினைகளையும் ஆராய ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில், அரியானா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவிசங்கர் ஜா, டெல்லி உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சைலேந்தர் கவுர், சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் ரிஷி குமார் சுக்லா, மேகாலயா மாநில முன்னாள் டி.ஜி.பி எல்.ஆர்.பிஷ்னோய் ஆகியோர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் மட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.


