ஐபிஎல்; சென்னை அணி ரசிகர்கள் மீது தடியடி

ஐபிஎல் எனப்படும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. 

இம்முறை சென்னை சேப்பாக்கம் விளையாட்டு அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் ஆட்டங்களுக்கு நுழைவுச் சீட்டுகள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.

வரும் மே 6 ஆம் தேதி நடைபெறும் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கு நுழைவுச்சீட்டுகள் விற்பனை புதன்கிழமை (மே 3) விற்கப்பட்டன.

நுழைவுச்சீட்டுகள் வாங்க செவ்வாய்க்கிழமை இரவு முதலே ரசிகர்கள் விளையாட்டு அரங்கிற்கு வெளியே வரிசையில் நிற்கத் தொடங்கினர். 

இந்நிலையில் காலையில் அத்துமீறி வரிசையில் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் விரட்டியடித்தனர்.

சில ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

குறைந்தபட்ச  1,500 ரூபாய் நுழைவுச் சீட்டுகள் விளையாட்டு அரங்கில் மட்டும் தான் விற்பனை செய்யப்படும். இணையத்தில்  2,500 ரூபாய் முதல்  5,000 ரூபாய் வரையிலான நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

நுழைவுச் சீட்டு விற்பனை நேர்மையாக நடப்பதில்லை என்று ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் குறைகூறியுள்ளனர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!