கைப்பேசிச் செயலிவழி ரூ.11 கோடி மோசடி

2 mins read
8705b7b7-98c1-430d-a2bc-f6795578fbe6
முதலீட்டு மோசடியில் மும்பை தொழில் அதிபர் ஒருவர் 10.8 கோடி ரூபாயை இழந்துள்ளார். - கோப்புப் படம்: வா‌ஷிங்டன் பல்கலைக்கழக இணையத்தளம்

மும்பை: கைப்பேசிச் செயலிவழி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.11 கோடி மோசடிப் பேர்வழிகளிடம் இழந்துவிட்டார்.

தெற்கு மும்பை சர்ச்​கேட் பகு​தி​யைச் சேர்ந்த 68 வயது தொழில​திபர் பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்ய திட்​ட​மிட்டுள்ளார். அப்​போது சமூக வலைத்தளத்​தில் உலா வந்த கவர்ச்சியான விளம்​பரம் ஒன்றை அவர் பார்த்​துள்​ளார். அதனைத் தொடர்ந்து மோகன் சர்மா என்ற பெயரில் வாட்​ஸ்​அப்​பில் பேசிய ஒரு​வர் பங்​குச் சந்தை ஆலோசக​ராக அறி​முக​மாகி​யுள்​ளார்.

“டிரேடர் டைட்​டன் விஐபி 46” என்ற வாட்​ஸ்​அப் குழு​வில் இணைக்​கப்​பட்ட அந்தத் தொழில​திபரிடம் பல முதலீட்​டாளர்​கள் தங்​களுக்கு அதிக லாபம் கிடைத்ததாகக் கூறிய ஸ்கிரீன்​ஷாட்​களை அந்தக் குழு​வில் பகிர்ந்​துள்​ளனர். இதனை உண்​மையென நம்​பிய அந்தத் தொழில​திபரிடம் பிரீமி​யம் உறுப்​பின​ராக மாற தனிப்பட்ட டிரேடிங் செயலியை பதி​விறக்​கம் செய்யுமாறு கூறினர்.

அதில் கணக்கு தொடங்​கிய​வுடன், தொழில​திபர் பல்​வேறு வங்கிக் கணக்​கு​களுக்குப் பணத்தை அனுப்​பி​யுள்​ளார். அவர் அனுப்​பும் பணம் உடனடி​யாக அந்​தச் செயலி​யின் வேலட்​டில் பிர​திபலிக்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டிருந்​தது. இதனால் உண்​மை​யாக வர்த்​தகம் நடப்​ப​தாக நம்​பி​யுள்​ளார்.

‘விங்ஸ் ஆப் ப்ரீடம்’ போன்ற பல்​வேறு குழுக்​கள் மூலம் அவருக்​குப் பயிற்சி மற்​றும் ஆலோ​சனை​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன.

கடந்த டிசம்​பர் 29, 2025 முதல் ஜனவரி 19, 2026 வரையி​லான குறுகிய காலத்​திற்​குள் சுமார் ரூ.10.98 கோடியை அவர் முதலீடு செய்​தார்.

இந்​நிலை​யில், தனது முதலீட்​டை திரும்​பப் பெற வேண்​டு​மா​னால் ரூ.8 கோடி அபராதம் செலுத்த வேண்​டும் என்று மிரட்​டி​யுள்​ளனர். அப்​போது​தான் தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்​ததாகக் கூறினார்.

அதையடுத்து மின்னியல் குற்றத்தடுப்புக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் மோசடிப் பேர்வழியைத் தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மோசடிநிதி மோசடிமும்பை