எச்ஐவி தொற்று குறித்து வெளியான செய்திகள்​ தவறானவை: கர்நாடக அதிகாரி

எச்ஐவி தொற்று குறித்து வெளியான செய்திகள்​ தவறானவை: கர்நாடக அதிகாரி

1 mins read
9a625889-15ba-4cb9-94b2-02bdd8cd7214
கர்​நாட​கா​வில் கிட்டத்தட்ட 2.60 லட்​சம் பேர் எச்​ஐவி பாதிப்​புக்கு ஆளாகி​யுள்​ளனர். - படம்: பிக்சாபே

பெங்களூரு: கர்​நாட​க மாநிலத்தில் கல்​லூரி மாணவர்​கள் 7,000 பேருக்கு எச்​ஐவி தொற்று இருப்​பது உறு​தி​யான​தாக அண்​மை​யில் செய்​தி​கள் வெளி​யாகின.

இந்​நிலை​யில், அச்செய்தி குறித்து கர்​நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்​கத்​தின் இயக்குநர் பத்மா பசவந்​தப்பா அறிக்​கை​மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

“அண்​மை​யில் ஊடகங்​களில் வெளி​யான செய்தி​கள் தவறானவை. கர்​நாட​கா​வில் 2004ஆம் ஆண்​டிலிருந்து 18 முதல் 35 வயதுக்​குட்​பட்ட கிட்டத்தட்ட 7,000 பேருக்கு எச்​ஐவி தொற்று இருக்​கிறது. இதனைத் திரித்​து, கல்​லூரி மாணவர்​களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகச் செய்​தி​கள் பரப்​பப்​பட்​டுள்​ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

“எங்​களிடம் இருக்​கும் புள்​ளி​ விவரங்​களில் மாணவர்​கள், இளம்​பெண்​கள், இல்லத்தரசிகள் என்​பது போன்ற வகைப்​பாடு எது​வும் இல்​லை. இந்த நோயைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில் கல்​லூரி​களில் எச்​ஐவி பரிசோதனை, எய்ட்ஸ் நோயாளி​களுக்​கான சிகிச்சை முகாம்​கள் நடத்த அரசு உத்​தர​விட்​டுள்​ளது,” என்று பத்மா கூறினார்.

தேசிய எய்ட்ஸ் கட்​டுப்​பாட்டு அமைப்​பின் அறிக்​கை​யின்​படி, நாட்டில் எச்​ஐவி தொற்று பாதிப்புள்ள அதி​க​மானோர் வாழும் மாநிலங்​களின் பட்​டியலில் கர்​நாடகா மூன்றாவது இடத்​தில் உள்​ளது.

கர்​நாட​கா​வில் கிட்டத்தட்ட 2.60 லட்​சம் பேர் எச்​ஐவி பாதிப்​புக்கு ஆளாகி​யுள்​ளனர்.

குறிப்புச் சொற்கள்