புதுச்சேரி அரசு மின்சாரப் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்

1 mins read
237788c0-671e-41c4-be52-c8e0d53be510
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சாரப் பேருந்து ஓட்டுநர்கள். - படம்: இந்து தமிழ் திசை

புதுச்சேரி: பி.எப், இ.எஸ்.ஐ. பணம் பிடித்தம் செய்யாத நிர்வாகத்தைக் கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக் கோரியும் புதுச்சேரி அரசு மின்சாரப் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.

புதுச்சேரி அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சாரப் பேருந்துகள் நவம்பர் மாதம் முதல் இயக்கப்படுகின்றன.

இந்த மின்சாரப் பேருந்துகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஊதியப் பிரச்சினை, பி.எப் பிடிக்காத நிர்வாகத்தைக் கண்டித்து ஏற்கெனவே ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆறு மாதத்திற்குப் பிறகு தான் பிடித்தம் செய்யப்படும் என நிர்வாகம் கூறியதால் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) காலை முதல் மீண்டும் அரசு மின்சாரப் பேருந்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்