புதுடெல்லி: இந்திய நகரங்களில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அதன் நகர்ப்புற எல்லை விரிவடைந்து, தற்போது நகர்ப்புற வளர்ச்சியில் நாட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு சுட்டியது.
நகரங்களில் கட்டடங்கள் அதிகரிக்கும் அளவை செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு கணக்கிட்டு ‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் இணையத்தளம் ‘சிட்டிஸ் இன் மோஷன்’ என்ற ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் பெங்களூரும் மூன்றாவது இடத்தில் சென்னையும் உள்ளன.
இதே காலத்தில் கட்டடங்களின் அளவு 197 சதுர கிலோ மீட்டரில் இருந்து 467 சதுர கிலோ மீட்டர் ஆக உயர்ந்துள்ளது. வாகனம், மின்னியல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சரக்குப் போக்குவரத்து ஆகிய துறைகளின் வளர்ச்சியால் சென்னையும் வளர்ச்சியடைந்தது.
டெல்லி தேசிய தலைநகர் மண்டலம், ஹைதராபாத், அகமதாபாத், கோல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களின் வளர்ச்சி விகிதம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.

