தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராகுல் வாக்குறுதி: ஏழைப் பெண்ணுக்கு மாதம் ரூ.8,500 உதவித் தொகை

2 mins read
75a8e022-4f15-4666-b68e-d8582fbf3380
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் குறைந்த வருமானக் குடும்பத்தில் உள்ள ஒரு பெண் உறுப்பினருக்கு மாத உதவித்தொகையாக ரூ.8,500 அளிக்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

ஹைதராபாத்: நாட்டில் உள்ள ஏழ்மையை ஒழிக்க இண்டியா கூட்டணி மாபெரும் திட்டங்களை வகுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், குறைந்த வருமானக் குடும்பங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்படும்.

அதன்படி ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பெண்ணைத் தேர்வு செய்து அவர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் போடப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

இதன்படி மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 8,500 வழங்கப்படும். இதில், இவர்கள் தங்களின் குடும்பத்துக்குத் தேவையான கல்வி, மருத்துவச் செலவுகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் மேதம் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சாபூரில் ராகுல் காந்தி வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், “நாட்டில் உள்ள 90 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலைச் சேர்ந்த மக்கள் அரசியலில் கோலோச்சுவது இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, ஓட்டுரிமை உள்ளிட்ட அனைத்தும் முன்னோர்கள் எழுதி வைத்த அரசியல் சாசனத்தினால் கிடைக்கிறது.

இதுபோன்ற ஒன்றை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ரத்து செய்வதாகத் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இதனால்தான் அரசியல் சார்ந்த சில துறைகளைத் தனியார் மயமாக்கவும் திட்டமிட்டனர். அதன் பின்னர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடலாம். இதுதான் பாஜகவின் திட்டம்.

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் நரேந்திர மோடி பல விமான நிலையங்கள், துறைமுகங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்து விட்டார். மோடியிடம் இருந்து இவற்றை மீட்கவே இண்டியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. மோடியிடம் உள்ள வெறும் 2 விழுக்காடு செல்வந்தர்கள் கையில் தான் நாட்டின் பொருளாதாரமே அடங்கி உள்ளது.

குறிப்புச் சொற்கள்