போட்டித் தேர்வுக்கு ஏதுவாக ‘சிபிஎஸ்இ’ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய பரிந்துரை

1 mins read
5366eac3-4848-4d86-9586-ae06408cf477
நவம்பரில் நடைபெற்ற 11 பேர் கொண்ட குழு கூட்டத்தில் மாணவர்கள் பயிற்சி நிலையங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய இந்திய அரசு திட்டமிட்டிருந்தது.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளப் பயிற்சி நிலையங்களையே பெரும்பாலான மாணவர்கள் நம்பி இருக்கின்றனர்.

தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் அந்நிலையங்களில் அவர்கள் செலவிடுகின்றனர்.

இதனால், மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்த இந்திய அரசு தீவிரம் காட்டியது.

நவம்பரில் நடைபெற்ற 11 பேர் கொண்ட குழு கூட்டத்தில் மாணவர்கள் பயிற்சி நிலையங்கள் சார்ந்திருப்பதைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதன் மூலம் அன்றாடப் பயிற்சி நேரத்தை இரண்டு முதல் மூன்று மணிநேரமாகக் குறைக்கவும் வழக்கமான பாடத்துடன் போட்டித் தேர்வு பாடங்களையும் இணைத்துப் புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்தும் மதிப்பீடு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில் போட்டித் தேர்வுகளில் பல விடைகள் கொண்ட பல தெரிவுகள் அடங்கிய வினாக்கள் (MCQ) மட்டுமே கேட்கப்படுகின்றன. ‘சிபிஎஸ்இ’ பாடத்திட்டம் பெரும்பாலும் பாடம், கோட்பாடுகள் சார்ந்ததாக இருப்பது தெரியவந்தது.

இந்த இடைவெளியைக் குறைக்க பள்ளி பாடத்திட்டங்களைப் போட்டித் தேர்வுகளுடன் சீரமைத்தல், 11ஆம் வகுப்பில் போட்டித் தேர்வுகளை அறிமுகப்படுத்துதல், சேர்க்கைகளில் வாரியத் தேர்வு முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல் ஆகியவற்றை அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்