ஆந்திரக் கோயிலில் ரூ.1 கோடி வைர கிரீடம் மாயம்

ஆந்திரக் கோயிலில் ரூ.1 கோடி வைர கிரீடம் மாயம்

1 mins read
0e10b1f4-4159-4447-aafe-08b6dc127646
461 கிராம் எடை​யிலான வைர கிரீடம். - படம்: இந்து தமிழ் திசை

திருப்பதி: ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம், குடி​வா​டா​வில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்​யாண வெங்​கடேசப் பெரு​மாள் கோயில் உள்ளது. அது இந்து சமய அறநிலை​யத் ​துறையின்கீழ் செயல்படுகிறது.

இந்​நிலை​யில், கடந்​த ஆண்டு ஜனவரி மாதத்​தில், மாட்​டூரி சுப்​பா​ராவ் எனும் பக்தர், 461 கிராம் எடை​யில், வைர கிரீடத்தை சுவாமிக்கு காணிக்​கை வழங்​கி​னார். இதன் தற்​போதைய மதிப்பு ரூ.1 கோடி எனக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், சில நாள்களுக்குமுன் கோயிலுக்குச் சென்ற மாட்​டூரி சுப்​பா​ராவ், சுவாமிக்கு வைர கிரீடத்தைச் சூட்டி அழகு பார்க்க வேண்​டும் எனக் கூறி​யுள்​ளார். ஆனால், அது வங்​கிப் பெட்டகத்தில்​ வைக்​கப்​பட்​டுள்​ளது எனக் கோயில் நிர்​வாகம் கூறியது.

ஒவ்வொரு முறையும் இதே பதிலைச் சொன்னதால் சந்தேகம் அடைந்த சுப்​பா​ராவ் இந்து சமய அறநிலையத் ​துறை​யில் முறை​யிட்​டார்.

இதையடுத்து, வியாழக்கிழமை (மே 21) உதவி ஆய்​வாளர் லலிதா ​கோ​யிலில் விசா​ரணை நடத்​தி​னார். அப்போது, அறங்​காவலர் குழு​வில் இடம்​பெற்​றுள்ள 31 பேரும் ஊரில் இல்லை எனத் தெரிவித்தனர்.

எனவே, நன்​கொடை​யாளரிடம் வைரக் கிரீடம் குறித்து தகவல்களைச் சேகரித்​தார். தற்​போது அந்தக் கிரீடம், கோயில் பணிகளுக்​காக ஓர் அடகுக் கடை​யில் அடகு வைக்கப்பட்​டுள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. அதனால், அந்த அடகுக் கடைக்காரருக்​கும் விசா​ரணைக்கு முன்னிலையாக வேண்டுமென அழைப்பாணை பிறப்பிக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்