சபரிமலைத் தங்கம் மாயமான வழக்கில் ஆலய வாரியத்தின் முன்னாள் தலைவர் கைது

சபரிமலைத் தங்கம் மாயமான வழக்கில் ஆலய வாரியத்தின் முன்னாள் தலைவர் கைது

2 mins read
dc64fd35-6adc-4db6-a0f9-595906231917
திரு​வி​தாங்​கூர் ஆலய வாரியத்தின் முன்​னாள் தலை​வர் பி.எஸ். பிர​சாந்த், கோயில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். - படம்: இந்து தமிழ் திசை

திரு​வனந்​த​புரம்: சபரிமலை கோயி​லில் தங்​கம் காணா​மல்போன வழக்கு தொடர்பாகத் திருவிதாங்கூர் ஆலய வாரியத்தின் முன்​னாள் தலை​வர் பி.எஸ்​.பிர​சாந்த் வியாழக்கிழமை (ஜூலை 23) கைது செய்​யப்​பட்​டார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் சபரிமலைக் கோ​யில் கரு​வறைக் கதவு நிலைகள் மற்​றும் துவார பால​கர் சிலைகளுக்கு மின்​முலாம் பூசுவதற்​காகத் தங்​கத்​தைக் கொண்டுசென்​றபோது தங்​கம் திருடப்பட்டதாகக் கூறி சிறப்புப் புல​னாய்​வுக் குழு விசா​ரணை​யைத் தொடங்​கியது.

2025ஆம் ஆண்டில் ஆலய வாரியத் தலைவராகப் பிரசாந்த் பதவி வகித்தார். அப்​போது, 2019ஆம் ஆண்டில் நடந்த தங்​கத் திருட்டை மறைப்பதற்காகப் பழுது இல்​லாத துவார பால​கர் சிலைகளில் பழுது இருப்​ப​தாகக் கூறி மீண்​டும் அவர் அனுப்பி வைத்​த​தாகச் சிறப்புப் புல​னாய்​வுக் குழு கேரள உயர் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது.

தேசிய உலோக​வியல் ஆய்​வகத்​தின் அறிக்கைமூலம், இந்த வழக்​கில் குற்​ற​வாளி​கள் தங்​கம் திருடிய முறை மற்​றும் சதித்​திட்​டம் குறித்த தெளி​வான தடயங்கள் கிடைத்​துள்​ள​தாக நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் தொடர்ச்​சி​யாக, வியாழக்கிழமை (ஜூலை 23) திரு​வனந்​த​புரத்​தில் உள்ள இல்​லத்​தில் வைத்துப் பிரசாந்தைச் சிறப்பு புல​னாய்​வுக் குழு கைது செய்​தது. இதே வழக்கு தொடர்​பாக ஆலய வாரியத்தின் முன்​னாள் உறுப்​பினர் அஜி குமார் மற்​றும் திரு​வாபரண ஆணை​யர் ஆர்​. ரெஜிலால் ஆகியோரிட​மும் சிறப்புப் புல​னாய்​வுக் குழு​வினர் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

கைது செய்​யப்​படு​வதற்குமுன் முகநூலில் பதி​விட்ட பிர​சாந்த், தன் மீதான நடவடிக்கை முற்​றி​லும் அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது என்​றும் 2019ஆம் ஆண்டில் நடந்த தங்​கத் திருட்டை வெளிக்​கொண்டு வந்​ததே தங்​கள் நிர்​வாகம்தான் என்​றும்​ கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்