தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் ரூ.164 கோடி

1 mins read
223310da-b9ec-4da2-beda-bbec894df39c
ஐயப்பன் கோவிலில் ரூ. 52.27 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதற்கேற்ப கோவிலின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

சன்னிதானம் திறக்கப்பட்டு 29 நாள்களில் இதுவரை ஏறத்தாழ ரூ.164 கோடி வருமானம் ஐயப்பன் கோவிலுக்கு வந்துள்ளது.

சபரிமலை கோவில் சன்னிதானம் சில வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது. 29 நாள்களில் இதுவரை 22.67 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4,51,043 பக்தர்கள் அதிகமாக தரிசனம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை ரூ.163.89 கோடி வருமானம் பெறப்பட்டதாகவும் இதில், பிரசாதத்தின் விற்பனை மட்டும் ரூ.82.67 கோடியைத் தொட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உண்டியல் காணிக்கையாக ரூ.52.27 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.22.76 கோடி அதிகமாகும்.

பிரசாத விற்பனையும் கடந்த ஆண்டைவிட ரூ.17.40 கோடி அதிகமாக நடைபெற்று உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்