விமானப் பயணத்தின் போது பெண் பயணியைக் கொட்டிய தேள்

இந்தியாவில் விமானப் பயணித்தில் இருந்த பெண் பயணியை தேள் ஒன்று கொட்டியுள்ளது. 

மிகவும் அறிய வகை சம்பவமாகப் பார்க்கப்படும் இது நாக்பூரிலிருந்து

மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடந்தது.

சம்பவம் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்ததாகவும் தேள் கொட்டிய பயணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்தது. பயணி தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.   

விமானத்தில் அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டதாகவும், பயணியின் புகாருக்குப் பிறகு விமானம் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு தேள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர்களிடம்  இருக்கைகள் மற்றும் அதன் தொடர்பான பொருள்கள் சுத்தமாக இல்லாமல் இருந்தால் உடனடியாக சுத்தம் செய்யும் படி கேட்டுக்கொண்டது. அதன் மூலம் பூச்சி மற்றும் வண்டுகள் விமானத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளமுடியும் என்று அதிகாரிகள் கூறினர். 

கடந்த டிசம்பர் மாதம் சரக்குகளை ஏற்றிச்செல்லும் ஏர் இந்திய விமானத்தில் பாம்பு ஒன்று இருந்தது, விமானம் கோழிக்கோடில் இருந்து துபாய் சென்றது. துபாய் விமான நிலையத்தில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!