விரைவில் இந்​தி​யா​வில் நீர்விமானச் சேவை அறிமுகம்

விரைவில் இந்​தி​யா​வில் நீர்விமானச் சேவை அறிமுகம்

1 mins read
01592088-4440-4305-9f03-73e5323d7f1f
நீர்விமானச் சேவை லட்​சத்​தீவுப் பகு​தி​யில் உள்ள ஐந்து தீவுகளுக்கு இயக்​கப்பட உள்​ளது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்​தி​யா​வில் வணிக ரீதியி​லான நீர்விமானச் சேவை விரைவில் தொடங்கவிருக்கிறது.

முதற்கட்​ட​மாக லட்​சத்தீவிலிருந்து நீர்விமானச் சேவை தொடங்​கப்படவுள்​ளது.

‘ஸ்​கைஹாப் ஏவியேஷன்’ என்ற நிறு​வனம் இதற்​கான அனு​ம​தியை இந்தியப் பொது விமானப் போக்​கு​வரத்து ஆணையத்திடமிருந்து பெற்றுள்​ளது.

முன்​ன​தாக, உத்​த​ராகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகு​தி​யில் ‘ஸ்கைஹாப் ஏவி​யேஷன்’ நிறு​வனம், கங்கா தடுப்​பணை​யில் இருந்து விமானத்தை மேலே கிளப்​பி​யும், நீரில் இறக்கியும் வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

நீர்விமானச் சேவை லட்​சத்​தீவுப் பகு​தி​யில் உள்ள ஐந்து தீவுகளுக்கு இயக்​கப்பட உள்​ளது. நீர்விமானத்​தில் ஒரே நேரத்​தில் 19 பேர் பயணம் செய்ய முடியும்.

லட்​சத்​தீ​வில் விமான நிலைய கட்​டமைப்​பு​கள் பெரிய அளவில் இல்லை. இதனால் லட்​சத்​தீவில் உள்ள ஐந்து தீவு​களுக்குச் சென்று வருவது மெது​வாக​வும் சிக்​கலாக​வும் உள்ளது. புதிதாக அறிமுகம் காணும் நீர்விமானச் சேவை பெரிய மாற்​றத்​தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்விமானச் சேவையால் பயண நேரம் வெகு​வாகக் குறை​யும் என்றும் சுற்​றுலாப் பயணிகளின் வருகை அதி​கரிக்​கும் என்றும் கூறப்படுகிறது.

விமான நிலை​யங்​கள் அமைக்க முடியாத மலைப்​பாங்​கான இடங்​கள், யாரும் எளி​தில் செல்ல முடி​யாத தீவு​கள், நீர்ப்பகு​தி​கள் ஆகிய இடங்களுக்கு இந்த நீர்விமானச் சேவை மிகப் பெரிய பங்​காற்​றும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்