ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இயங்கி வரும் ஓர் உணவகத்தில் விநியோகிக்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டு சிலருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தயாரிப்புக் கூடத்தைப் பார்வையிட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலையோர உணவகங்களில் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பெண் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், கைரதாபாத் பகுதியில், மோமோஸ் தயாரிப்புக் கூடம் இயங்கி வந்த நிலையில், காவல்துறை உதவியோடு அதனைக் கண்டுபிடித்து, அங்குச் சென்ற அதிகாரிகள், உணவுக்கூடம் இயங்கி வந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உணவுக் கூடத்தை நடத்தி வந்தவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்படி என்னதான் அங்கே பிரச்சினை என்று அவர்கள் கூறியிருப்பதாவது: “உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் எந்த வழிமுறையும் அங்கே பின்பற்றப்படவில்லை. மிகவும் சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் சமையல் செய்யப்பட்டுள்ளது. மோமோஸ் தயாரிப்பு மாவு, அப்படியே குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
“அதன் அருகே திறந்தநிலையில் குப்பைத் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. அங்கே தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்துள்ளனர்.

