ரூ.12 கோடி மதிப்புள்ள பாம்பு நஞ்சைக் கடத்த முயற்சி

கோல்கத்தா: இந்தியா - பங்ளாதேஷ் எல்லைப் பகுதியில் ரூ.12 கோடி மதிப்புள்ள பாம்பு நஞ்சைக் கைப்பற்றி இருப்பதாக வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 9) எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

படிகக் குடுவைக்குள் ஊற்றி அதனைக் கடத்தி வந்ததாகக் கூறி, ஆடவர் ஒருவரை அவர்கள் கைதுசெய்தனர். பின்னர் அவர் மேற்கு வங்க மாநில வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த ஆடவர் மேற்கு வங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தபன் அதிகாரி, 51, எனப் பின்னர் அடையாளம் காணப்பட்டது.

பாம்பு நஞ்சிருந்த சிறப்புப் படிகக் குடுவை பிரான்சில் தயாரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. நேப்பாளம் வழியாகச் சீனாவிற்கு அதனைக் கடத்த முயன்றிருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு நஞ்சு சோதனைக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 14 மாதங்களில் பாம்பு நஞ்சைக் கடத்த முயன்று பிடிபட்டிருப்பது இது மூன்றாம் முறை எனத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!