தேர்வில் 100க்கு 115 மதிப்பெண் கிடைத்தது; மாணவர்களுக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி!

மும்பை: கடந்த நவம்பரில் மும்பை பல்கலைக்கழகத்தில் ஐந்தாவது அரையாண்டுப் பருவ கணிதத் தேர்வு எழுதிய மாணவர்களில் அறுவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

அவர்களுக்கு அதிகபட்ச மதிப்பெண்களைவிட அதிகமாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

சில மாணவர்களுக்கு 115 மதிப்பெண்ணும் இருவருக்கு 104 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி குறிப்பிட்டது.

பி.எஸ்சி. கணிதம் மூன்றாமாண்டு பயின்ற மாணவர்கள் 2022 நவம்பரில் எழுதிய ஐந்தாம் அரையாண்டுப் பருவத் தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாயின.

முன்னதாக, தேர்வெழுதியபோதும் சில மாணவர்கள் ‘தேர்வெழுத வரவில்லை’ எனக் குறிப்பிட்டிருந்ததையும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தியாக வெளியிட்டிருந்தது.

இப்போது தேர்வு முடிவுகளிலும் தவறுகள் நிகழ்ந்துள்ள நிலையில், அவை சரிசெய்யப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது தேர்வுத்தாள் மதிப்பீட்டுத் தரம் மோசமாக இருப்பதைக் காட்டுகிறது என்று கூறி, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நொந்துகொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!