கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் உணர்வு நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும்: மோடி

2 mins read
c3f4c604-79c9-4596-a727-5e7dad8cf171
டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நாளான வியாழக்கிழமை காலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்துகொண்டு மோடி வாழ்த்துத் தெரிவித்தார். - படம்: பிஐபி

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள பழமைவாய்ந்த கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நாளில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலை​த்தளத்​தில் பதிவிட்டுள்ளார். அதில், “டெல்​லி​யில் உள்ள ‘தி கதீட்​ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்​ஷன்’ தேவால​யத்​தில் காலை நடைபெற்ற ​கிறிஸ்​து​மஸ் வழி​பாட்​டில் கலந்துகொண்​டேன்.

“இந்த வழி​பாடு அன்​பு, அமைதி மற்​றும் கருணை ஆகிய காலத்​தால் அழி​யாத செய்​தி​யைப் பிர​திபலித்​தது. கிறிஸ்​து​மஸ் பண்​டிகை​யின் உணர்வு நம் சமூகத்​தில் நல்​லிணக்​கத்​தை​யும் நல்​லெண்​ணத்​தை​யும் ஊக்​குவிக்​கட்​டும்,” என்று எக்ஸ் பதிவில் குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்​தி​யா​வில் பல்​வேறு கலா​சாரப் பின்​னணியைக் கொண்​ட​வர்​கள் ஒன்​றிணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்​டாடினர். இதையொட்​டி, புதுடெல்​லி​யில் உள்ள கதீட்​ரல் தேவால​யத்​தில் கிறிஸ்துமஸ் நாளான வியாழக்கிழமை, காலை​யில் நடை​பெற்ற கிறிஸ்​து​மஸ் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்துகொண்​டு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்.

பேராயர் ரெவ் பால் ஸ்வரூப் தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேலும், தொட்டிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசுவின் உருவச் சிலையையும் பிரதமர் மோடி தரிசித்தார். இந்த வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். தேவாலய வழிபாட்டில் கலந்துகொண்ட பிறகு பிரதமர் மோடி, பாதிரியார்களிடம் கலந்துரையாடினார். 

முன்​ன​தாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில், “அனை​வருக்​கும் அமை​தி, கருணை மற்​றும் நம்​பிக்கை நிறைந்த மகிழ்ச்​சி​யான கிறிஸ்​து​மஸ் வாழ்த்​துகள். இயேசு கிறிஸ்​து​வின் போதனை​கள் நம் சமூகத்​தில் நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்​தட்​டும்” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காணொளி மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என்றும் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். வாழ்க்கையை அன்பாலும் கருணையாலும் நிரப்பட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்