ஒடிசா: உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

புவனேஸ்வர்: உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்று இந்தியாவின் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களின் உறவினர்கள் தானம் செய்து, பல உயிர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், நன்கொடையாளர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் கௌரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என்ற முதல்வர் நவீன், உடலுறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உறுப்பு தானம் செய்வோரின் உடல் மீது மூவண்ணக் கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்நாட்டில் உடலுறுப்பு தானம் செய்வோரின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!