பழனி கோவிலில் குவியும் போலி தங்கம், வெள்ளி காணிக்கைகள்

பழனி கோவிலில் குவியும் போலி தங்கம், வெள்ளி காணிக்கைகள்

1 mins read
491074df-8de6-4117-a416-41ab9d89bbb3
-
multi-img1 of 2

பழனி: கோவிலில் காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் தங்கம், வெள்ளி முலாம் பூசிய தகடுகளை விற்பனை செய்து நடைபாதையோர வியாபாரிகள் ஏமாற்றி வருவது அம்பலமாகி உள் ளது. இதையடுத்து அத்தகைய வியாபாரிகளை இனம்காண பழனி காவல்துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடவுள் சிலைகள், கால், தலை போன்ற உருவங்கள் கொண்ட தகடுகளை காணிக் கையாகச் செலுத்துவது வழக்கம். தங்கம், வெள்ளித் தகடுகளை காணிக்கையாக செலுத்துவதே பக்தர்களின் விருப்பமாக உள்ளது. இதை நன்கு அறிந்துள்ள நடைபாதை வியாபாரிகள் சிலர், அலுமினியத் தகடுகள் மீது தங்கம், வெள்ளி முலாம் பூசுகி றார்கள். பின்னர் அவை உண்மை யான தங்க, வெள்ளித் தகடுகள் என்று கூறி விற்பனை செய் கிறார்கள்.

விலை குறைவாக இருப்பதால், போலித் தகடுகளை அசல் தங்கம், வெள்ளியில் செய்யப்பட்டதாகக் கருதி பக்தர்கள் வாங்குவதுடன் அவற்றையே கோவில் உண்டியலில் காணிக்கையாகவும் செலுத்துகின் றனர்.2016-01-12 06:00:00 +0800