ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் பலி

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் பலி

1 mins read
b1286e85-fe28-4e9f-9326-eebc73e9b12e
-

அகமதாபாத்: குஜராத்தில் அரசுப் பேருந்து நதியில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நவ்சாரி நகரிலிருந்து உகாய் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பேருந்து. பூர்ணா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்றபோது அப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் 37 பேர் பலியாகி உள்ளனர். படம்: ஊடகம்