சென்னை: தமிழகத்தில் சில கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நூறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெயட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சாதகமான அறிவுப்புகள் வெளிவரவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகின்ற பாதையில் மறியல் போராட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் என தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் அரசுப் பணிகள் என்றைக்கும் இல்லாத வகையில் முடங்கியுள்ளன. தொடர்ந்து அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஏமாற்றமளித்த தமிழக அரசின் பட்ஜெட்: அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்
1 mins read
-

