சென்னை: நான்கு மடங்களில் மடாதிபதியாக செயல்பட நித்தியானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. பொய் வாக்குறுதி அளித்து தன்னுடைய மடங்களை நித்தியானந்தா கைப்பற்றிவிட்டதாக சேலத்தைச் சேர்ந்த ஆத்மானந்தா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து மார்ச் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்க நித்தியானந்தாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவுக்கு நீதிமன்றம் தடை
1 mins read
-

