புதுச்சேரி: பீகார் தேர்தலைப் போல தமிழகம், புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தல்களில் பெண்களுக்குப் போட்டியிட அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மகளிர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் நடிகை நக்மா தெரிவித்தார். புதுச்சேரிக்குச் சென்றிருந்த அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் ஒரு புறம் தாலிக்குத் தங்கம் வழங்கிவிட்டு, மதுவால் கணவர்கள் உயிரையும் பறித்துவிடுகின்றனர். இதனால் தமிழகத்தில் விதவைகள் அதிகமாக உள்ளனர். இலவசங்களைக் காண்பித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார் அவர்.
நக்மா நம்பிக்கை
1 mins read
-

