கனிமொழி: பறக்கும் படை தேவை

கனிமொழி: பறக்கும் படை தேவை

1 mins read
50c0ffcd-392e-4f83-ad2e-1f8e2114ed3f
-

சென்னை: தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் வருமான வரி, சுங்கத்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையை அமைத்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக கோரிக்கை வைத்துள்ளது. டெல்லியில் திமுக மேலவை உறுப்பினர் கனிமொழி, தலைமைத் தேர்தல் ஆணையர்களை நேரில் சந்தித்து மனு அளித்து இவ்வாறு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.