வேலூர் சிறையில் நளினி- முருகன் மீண்டும் சந்திப்பு

வேலூர் சிறையில் நளினி- முருகன் மீண்டும் சந்திப்பு

1 mins read
982e0e08-b0ad-404e-866f-6f35f67fce5d
-

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி, முருகன் இருவரும் வேலூர் சிறையில் மீண்டும் சந்தித்துப் பேசினர். வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியும் அவரது கணவர் முருகனும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி நேற்று காலை 7.55 மணிக்கு இருவரும் சந்தித்தனர். அரைமணி நேரம் இச்சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.