லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்துவருகிறது. மழையால் சேதமடைந்த இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அங்குள்ள கர்கவுடா பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட மூவர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் கனமழை; கட்டடம் இடிந்து 3 குழந்தைகள் உட்பட ஐவர் பலி
1 mins read
-

