'ஓலா டாக்சி' நிறுவனத்தின் மீது 'உபர் டாக்சி' வழக்கு

'ஓலா டாக்சி' நிறுவனத்தின் மீது 'உபர் டாக்சி' வழக்கு

1 mins read
8a5a949c-48ec-484f-9bf8-0116e1a97348
-

புது­டெல்லி: 'உபேர் டாக்சி' நிறு­வ­னம் ரூ. 50 கோடி நஷ்­ட­ஈடு கேட்டு 'ஓலா டாக்சி' நிறு­வ­னத்தின் மீது வழக்­குத் தொடர்ந்­துள்­ளது. கைத்­தொலை­பேசி செயலி மூலம் செயல்­படும் டாக்சி நிறு­வ­னங்கள் 'உபர்' மற்­றும் 'ஓலா'. இந்த இரண்டு நிறு­வ­னங்களுக்­கும் இடையே கடுமை­யான போட்டி நிலவி வரு­கிறது. இந்­நிலை­யில் 'உபர்' நிறு­வ­னம் 'ஓலா' மீது டெல்லி உயர்நீதி­மன்றத்­தில் வழக்­குத் தொடர்ந்­துள்­ளது. 'ஓலா' நிறு­வ­னம் போலிக் கணக்­கு­களைத் துவங்கி 'உபர்' நிறு­வன டாக்­சி­களை பதிவு செய்து ஓட்­டு­நர்­களை அலை­ய­விட்டு அதை ரத்து செய்­துள்­ளது. இதற்­கா­கவே 'ஓலா' நிறு­வ­னம் 90,000 போலி கணக்­கு­களைத் துவங்­கி­யுள்­ளது. 'ஓலா' போலிக் கணக்­கு­கள் மூலம் டாக்­சி­களை பதிவு செய்து ரத்து செய்­த­தன் மூலம் 'உபர்' நிறு­வ­னத்­திற்கு நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு நாடு முழு­வ­தும் சுமார் 4 லட்­சம் டாக்­சி­களை 'ஓலா' பதிவு செய்து ரத்து செய்­துள்­ள­தாக அந்த வழக்­கில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.