புதுடெல்லி: 'உபேர் டாக்சி' நிறுவனம் ரூ. 50 கோடி நஷ்டஈடு கேட்டு 'ஓலா டாக்சி' நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. கைத்தொலைபேசி செயலி மூலம் செயல்படும் டாக்சி நிறுவனங்கள் 'உபர்' மற்றும் 'ஓலா'. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் 'உபர்' நிறுவனம் 'ஓலா' மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. 'ஓலா' நிறுவனம் போலிக் கணக்குகளைத் துவங்கி 'உபர்' நிறுவன டாக்சிகளை பதிவு செய்து ஓட்டுநர்களை அலையவிட்டு அதை ரத்து செய்துள்ளது. இதற்காகவே 'ஓலா' நிறுவனம் 90,000 போலி கணக்குகளைத் துவங்கியுள்ளது. 'ஓலா' போலிக் கணக்குகள் மூலம் டாக்சிகளை பதிவு செய்து ரத்து செய்ததன் மூலம் 'உபர்' நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் டாக்சிகளை 'ஓலா' பதிவு செய்து ரத்து செய்துள்ளதாக அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஓலா டாக்சி' நிறுவனத்தின் மீது 'உபர் டாக்சி' வழக்கு
1 mins read
-

