சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் பலமுனைப் போட்டி நிலவு வதால் வாக்குகள் சிதறும் என்றும் அது பாஜகவிற்குச் சாதகமாக அமையும் என்றும் தமிழக பாஜக துணைத் தலைவி வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவரது அண்மைய பேட்டி ஒன்றில், மக்கள் நலக் கூட்டணி என்பது முரண்பட்ட கூட்டணி என்று அவர் கூறியுள்ளார். "மக்கள் நலக் கூட்டணிக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர்வார்கள். மத்தியில் நாங்கள் ஆளுங்கட்சியாக இருப்பதே மிகப் பெரிய பலம். மக்களுக்குத் தேவையான நல்ல விஷயங்களை அவர்களைவிட எங்களால் முன்னெ டுக்க முடியும். "மக்கள் நலக் கூட்டணியால் ஓர் அரசாங்கத்தைக் கொடுக்க முடியும் என தமிழக மக்கள் நிச்சயமாக நம்ப மாட்டார்கள்," என்று வானதி மேலும் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் சிதறும், பாஜக வெற்றி பெறும்: வானதி நம்பிக்கை
1 mins read
-

