இந்தியப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்

இந்தியப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்

1 mins read
37782d9e-7576-425a-a17a-f8cf5154a169
-

­­­­­­­இந்­தி­யா­வின் சட்­டீஸ்­கர் மாநிலம் சுர்கூஜா மாவட்­டம் அம்­பி­கா­பூரைச் சேர்ந்த­வர் 25 வயது மனி­தா­வுக்கு ஒரே பிர­ச­வத்­தில் ஐந்து பிள்ளை­கள் பிறந்­துள்­ளன. கரு­வுற்­றி­ருந்த மனிதா மார்ச் 31ஆம் தேதி, பிர­ச­வத்­திற்­காக மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­ கப்பட்­டார். அறுவை சிகிச்சை மூலம் மனி­தா­விற்கு நேற்று ஒரே பிர­ச­வத்­தில் ஐந்து குழந்தை­கள் பிறந்தன. எல்லாக் குழந்தை­களும் 1 கிலோ, 1.5 கிலோ என எடை குறைவாக பிறந்த­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர். எனினும் குழந்தைகளின் பால் விவரம் குறித்து எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. அக்­கு­ழந்தை­கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்­கப்­பட்­டுள்­ளன. தாயும் குழந்தை­களும் நலமாக இருப்­ப­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங் களும் அவரது கணவர் உமேஷ்­கு­மா­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.