திருப்பூர்: தலித் இளையர் உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அவரது மனைவி கௌசல்யாவின் பெற்றோர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இருவரும் கடந்த மார்ச் 31ஆம் தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் இம்மனுக்களை விசாரித்த நீதிபதி, அவற்றைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கௌசல்யாவும் சங்கரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உடுமலை பேருந்துநிலையம் அருகே கடந்த 13ஆம் தேதி சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
உடுமலை கொலை: கௌசல்யா பெற்றோரின் பிணை மனு தள்ளுபடி
1 mins read
-

