சென்னை: முன்னாள் காவல்துறை தலைவர் ஆர்.நட்ராஜ் மீது பண மோசடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் சென்னையிலுள்ள மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் நட்ராஜ். இந்நிலையில் அவர் மீது மோசடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, நட்ராஜ் தன்னிடம் இருந்து 28.5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் வாய்ப்பு வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் சரவணன் என்பவர் காவல்துறையில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.28 லட்சம் மோசடி செய்தார்: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது புகார்
1 mins read
-

