தேர்தல் நிலைப்பாடு குறித்து சனிக்கிழமை அறிவிக்கிறார் கார்த்திக்

தேர்தல் நிலைப்பாடு குறித்து சனிக்கிழமை அறிவிக்கிறார் கார்த்திக்

1 mins read
0286bddf-c8e2-4c3d-b671-1aa1c3cdfb2a
-

சென்னை: நாடாளும் மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அதன் தலைவரும் திரைப்பட நடிகருமான கார்த்திக் சனிக்கிழமை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் திமுக தலைவரை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து அவர் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது. எனினும் கடைசி நேரத் தில் இச்சந்திப்பை அவர் ரத்து செய்துவிட்டார். இந்நிலையில், அவரை திமுக பக்கம் போகவிடாமல், அதிமுக புள்ளிகள் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து தனது நிலை குறித்து விளக்கத் திட்டமிட்டுள்ளார் கார்த்திக்.