400 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயத்தில் முதன்முறையாக பெண்கள் வழிபாடு

400 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயத்தில் முதன்முறையாக பெண்கள் வழிபாடு

2 mins read
eb702cd7-520a-47a3-bc1e-ab2efb43d6d1
-

அக­­­ம­­­து­­­ந­­­கர்: மகா­­­ராஷ்­­­டிரா மாநி­­­லத்­­­தின் சிங்­­­க­ணாப்­­­பூர் சனி பகவான் கோயில் கரு­­­வறைக்­­­குள் 400 ஆண்­­­டு­­­களுக்­­­குப் பிறகு முதன் முறையாக பெண்கள் சென்று வழிபாடு நடத்­­­தி­­­யுள்­­­ள­­­னர். மும்பை உயர்­­­நீ­­­தி­­­மன்ற உத்­­­த­­­ரவைத் தொடர்ந்து பாரம்ப­­­ரி­­­ய­­­மா­கக் கடைப்­­­பி­­­டிக்­­­கப்­­­பட்டு வந்த வழி­­­பாட்டு முறையை சனி­­­ப­­­க­­­வான் கோயில் நிர்­­­வா­­­கம் மாற்­­­றி­­­ அமைத்­­­தது. இதை­­­ய­­­டுத்­­து போலி­சா­ரின் பாது­­­காப்­­­பு­­­டன் பெண்கள் நல ஆர்­­­வ­­­லர் திருப்தி தேசாய் தலைமை­யி­லான குழு­­­வி­­­னர் மட்­­­டு­­­மின்றி ஏரா­­­ளா­­­மான பிற பெண்­­­களும் நேற்று முன்தினம் கோயிலின் கரு­­­வறைக்­­­குள் சென்று வழி­பட்­­­ட­­­னர்.

சிங்க­­­ணாப்­­­பூர் சனி பகவான் கோயில் புனித மேடையில் பெண்­­­களுக்கு அனுமதி அளிக்­­­கும் முடிவை மகா­ராஷ்­டிர முதல்­­­வர் தேவேந்­­­திர ஃபட்­­­ன­­­வீஸ் வர­­­வேற்­­று உள்­­­ளார். பெண்கள் வழிபட அனுமதி அளிக்­­­கப்­­­பட்­­­டதை பாலின சமத்­­­து­­­வத்­­­து­­­கான போராட்­­­டத்­­­திற்குக் கிடைத்த வெற்றி என பெண்கள் அமைப்­­­பு­­­கள் வர­­­வேற்­­­றன. மகா­­­ராஷ்­­­டிர மாநிலம், சிங்க­­­ணாப்­­­பூ­­­ரில் உள்ள சனி பகவான் கோயிலில் உள்ள புனித மேடையில் பெண்கள் ஏறு­­­வதற்கு கோயில் நிர்­­­வா­­­கம் அனுமதியளித்­­­தது. அதை­­­ய­­­டுத்­­­து புனித மேடை யில் பெண்களை அனு­­­ம­­­திப்­­­ப­­­தில்லை என்று கடந்த சில நூற்­­­றாண்­­­டு­­­க­­­ளா­­­கக் கடைப் ­­­பி­­­டிக்­­­கப்­­­பட்டு வந்த பாரம்ப­­­ரிய மர­­­புக்கு முற்­­­றுப்­­­புள்ளி வைக்­­­கப்­­­ பட்­­­டது. சிங்க­­­ணாப்­­­பூ­­­ரில் உள்ள பழைமை வாய்ந்த சனி பகவான் கோயி­­­லுக்­­­குள் உள்ள புனித மேடையில் பெண்கள் ஏறு­­­வதற்­­­கு இருந்த தடையை எதிர்த்து மும்பை உயர் நீதி­­­மன்றத்­­­தில் பெண்கள் அமைப்­­­பி­­­னர் பொதுநல மனுத் தாக்கல் செய்­­­த­­­னர்.

போலிசாரின் பாது­காப்­பு­டன் பெண்கள் நல ஆர்­வ­லர் திருப்தி தேசாய் தலைமை­யி­லான குழு­வி­னர் மட்­டு­மின்றி ஏரா­ளா­மான பெண்­களும் சிங்கணாபூர் கோயிலுக்­குள் சென்று வழி­ பட்­ட­னர். படம்: ஏஎஃப்பி