கோவை: தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களை நம்பியே நாம் தமிழர் கட்சி தேர்தல் களம் காண்பதாகக் குறிப்பிட்டார். "முதல்வர் ஜெயலலிதா, தாய் போல இந்த நாட்டை ஆண்டேன் என்கிறார். எந்த தாய் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து வைத்து, மகன்களை குடி எனச் சொல்வார்? இந்த முறையேனும் தமிழகத்தை தமிழர் ஆள வழிவகை செய்யுங்கள். "திமுகவும் அதிமுகவும் பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுவிட்டு, இப்போது புதிதாக அரசியலுக்கு வந்தது போல், 'நாங்கள் வந்தால் அதைச் செய்வோம், இதை செய்வோம்' என்கிறார்கள். ஏன் ஆட்சியில் இருந்தபோது அவற்றைச்செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பினார் சீமான்.
தமிழரை ஆள வையுங்கள்: தமிழக மக்களுக்கு சீமான் வேண்டுகோள்
1 mins read
-

