'ஜெயலலிதா பொய்ப் பிரசாரம்'

'ஜெயலலிதா பொய்ப் பிரசாரம்'

1 mins read
5a0694c7-49de-459b-9c2d-42659e703d2e
-

சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதா பொய்ப் பிரச்சாரம் செய்வதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். "கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஃபுளோரைடு பாதிப்பில் உள்ள மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 1997ல் திமுக ஆட்சியில் வடிவமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இந்தத் திட்டத்தின் சுமார் 90% பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், தேர்தல் பிரசாரத்துக்காக தருமபுரி வந்த ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியதாக பொய்ப் பேசுகிறார். இப்படி பொய்ப் பேசுவதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்," என்று அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டார்.