நகை வியாபாரிகளிடம் ரூ.1.35 கோடி பறிமுதல்

நகை வியாபாரிகளிடம் ரூ.1.35 கோடி பறிமுதல்

1 mins read

கோவை: அர­சுப் பேருந்­தில் நகை வியா­பா­ரி­கள் கொண்டு வந்த 1.35 கோடி ரூபாய் பணத்தை உரிய ஆவ­ணங்கள் இல்லை­யெ­னக் கூறி தேர்­தல் அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். இது அப்­ ப­கு­தி­யில் பர­ப­ரப்­பேற்­படுத்­தி­யுள்­ளது. இவர்­க ளைப் போன்று எண்­ணற்ற வியா ­பா­ரி­கள் பணத்தைப் பறிகொடுத்து விட்டு அவ­திக்­குள்­ளா­கும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. பல­ரின் தொழில்­களும் கட்­டு­மா­னப் பணி­களும் முடங்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

தாங்கள் நகை வியா­பா­ரி­கள் என்­றும் நகை விற்ற பணத்தைக் கொண்டு செல்­வ­தாகவும் இரு­வ­ரும் மன்றாடினர். எனி­னும் அப்­ப­ணத்தைத் தேர்­தல் அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். 10 லட்­சத்­துக்கு மேல் ஆவ­ணங்கள் இன்றி பணம் பறி­மு­தல் செய்­தால் வரு­மான வரித்­துறை­யி­டம் தெரி­விக்க வேண்­டும் எனத் தேர்­தல் ஆணை­யம் அறி­வு­றுத்தி இருப்­ப­தால் அப்பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது.