சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் 60 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப்போவதாக, இந்திய கிறிஸ்தவர் முன்னணி கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் எம்.எல். சுந்தரம், தேர்தலில் தங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "எங்களுக்கு தேர்தல் ஆணையம் திராட்சை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக 37 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளோம். விரைவில் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும்," என்றார் சுந்தரம். முன்னதாக இந்திய கிறிஸ்தவர் முன்னணி திமுக அணியில் இணையும் என எதிர்பார்க்கப் பட்டது.
இந்திய கிறிஸ்தவர் முன்னணி தனித்துப் போட்டி
1 mins read

