சென்னை: தமிழகம், புதுவையிலும் வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் அன்றே 83 வேட்பாளர்கள் தங்கள் மனுவைத் தாக்கல் செய்தனர். ஆனால் அதிமுக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக போன்ற முக்கிய கட்சிகளிலிருந்து யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. புதுச்சேரியில் தொடக்க நாள் அன்று மூவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் முக்கிய தலைவர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கலுக்குக் கடைசி நாள் ஏப்ரல் 29. இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2ல் தயாராகும்.
வேட்பு மனுத் தாக்கல் முதல் நாளில் 83 பேர் மனு
1 mins read

