பச்சை தலைப்பாகை அணிந்து வலம் வரும் வைகோ

பச்சை தலைப்பாகை அணிந்து வலம் வரும் வைகோ

1 mins read

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் தற்போது புதுப் பாணியைக் கடைப்பிடித்து வருகிறார். அதாவது பச்சை நிற தலைப்பாகை அணிந்து அவர் காட்சியளிக்கிறார். இந்த மாற்றத்துக்-கு என்ன காரணம் என்று அவரது கட்சியினர் சிந்தித்துவரும் வேளையில் சோதிடரின் ஆலோசனையே காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்த திருக்கோயிலூர் சோதிடரான பரணீதரன், "வைகோ கிருத்திகை நட்சத்திரம், மூன்றாம் பாகத்தில் பிறந்தவர். பிறக்கும்போது அவருக்குச் சூரிய திசை துவங்கியது. தற்போது, புதன் திசை தொடங்கியுள்ளது. புதனுக்கேற்ற நிறம் பச்சை. எனவே, இந்தக் காலத்தில் பச்சை நிற ஆடை, பச்சை நிறத் துண்டு பயன்படுத்துவதால் யோகம் உண்டாகும்," என்று கூறினார்.