கூட்டணி ஆட்சி: திருமா நம்பிக்கை

கூட்டணி ஆட்சி: திருமா நம்பிக்கை

1 mins read

விழுப்புரம்: தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி ஆட்சி அமையும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இம்முறை காட்டுமன்னார் கோவில் தொகுதியில் களமிறங்கும் அவர், நேற்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிடுவதாகக் கூறினார். இம்முறை தமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் ஊழல் அறவே ஒழிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.