தேர்தலைப் புறக்கணிக்கும் 12 கிராமங்கள்

தேர்தலைப் புறக்கணிக்கும் 12 கிராமங்கள்

1 mins read

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாவதாக போச்சம்பள்ளி பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அந்நீரை திம்மிநாயக்கன்பட்டி ஏரிக்கு திறந்துவிட்டால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர், விவசாய தேவைகள் பூர்த்தியாகும் என இவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் 50 ஆண்டுகளாக இக்கோரிக்கை நிறைவேறாததால் ஏழு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வைத்ததுடன் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதேபோல் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட 5 கிராம மக்கள் (படம்) தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.