மூவாயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளையர் பலி

மூவாயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளையர் பலி

1 mins read

மதுரை: மூவாயிரம் அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த மதுரையைச் சேர்ந்த சுற்றுலா பயணி கார்த்தி கேயன் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 29 வயதான அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறு நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்கள் இருவருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர், தடை செய்யப்பட்ட மலைப் பகுதிக்கு இரவில் சென்றுள்ளனர். அங்கு புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது கார்த்தி கேயன் மூவாயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.