குளித்தலை: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலானது தமிழகத்தின் வரலாற்றையே மாற்றியமைக்கக் கூடிய தேர்தல் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். குளித்தலையில் மேற் கொண்ட தேர்தல் பிரசா ரத்தின் போது பேசிய அவர் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு இத் தேர்தல் வழி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். "திராவிட ஆட்சிக ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தவுமே விஜயகாந்த் தலைமையில் பிரமாண்ட மான கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது. இந்த அணிக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் வித்திட வேண்டும். "திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பண பலம், ஆட்சி பலம் இருக்கலாம். ஆனால் எங்களிடம் மக்கள் பலம் உள்ளது," என்றார் வாசன்.
வரலாற்றை மாற்றப்போகும் தேர்தல்: வாசன் நம்பிக்கை
1 mins read
-

