வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

1 mins read
5e9a8d64-1a34-43a3-830b-d96401894f92
-

வாரணாசி: புகை மாசைக் கட்­டுப்­படுத்­தும் வகையில் கங்கை­யில் இயக்­கப்­படும் அனைத்து பட­கு­களை­யும் இ-­ப­ட­கு­க­ளாக மாற்ற பிர­த­மர் நரேந்­திர மோடி அறி­வு­றுத்­தி­யுள்­ளார். கங்கை­யில் தற்போது டீசலால் இயங்­கும் இயந்திரம் பொருத்­திய பட­கு­கள் பயன்­படுத்­தப்­ படு­கின்றன. அதிக டீசல் புகை கார­ண­மாக கங்கை­யில் மாசு ஏற்­படு­கிறது. அதனால், அங்கு சூரிய சக்­தி­யால் இயங்­கும் இ=பட­கு­களை போக்­கு­வ­ரத்­துக்கு தொடங்கி வைத்தார். மாதந்­தோ­றும் மோடி தமது தொகுதியான வாரணாசிக்­குச் செல்வதை வழக்­க­மாக வைத்­து உள்­ளார். அவ்வகையில் அவர் இந்த வரு­டத்­தில் மூன்றா­வது முறை யாக நேற்று வாரணாசி சென்றார். டெல்­லி­யில் இருந்து தனி சிறப்பு விமா­னத்­தில் பபத்­பூர் விமான நிலை­யத்­துக்கு வந்த மோடி பிறகு அங்­கி­ருந்து ஹெலி­காப்­டர் மூலம் உத்­த­ர­பி­ர­தே­சத்­தின் கிழக்குப் பகு­தி­யில் உள்ள பல்லியா எனும் பகு­திக்­குச் சென்றார்.

அங்கு மோடி நாடெங்­கும் வறுமைக் கோட்­டுக்குக்கீழ் வாழும் ஏழை­களுக்­கு இலவச சமையல் எரிவாயு வழங்­கும் திட்­டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த திட்­டத்­தின்­படி நாடெங்­கும் 5 கோடி ஏழைகள் பலன் பெறு­வார்­கள். பல்லியா நிகழ்ச்­சியை முடித்­துக் கொண்டு பிர­த­மர் மோடி ஹெலி­காப்­ட­ரில் வாரணாசி திரும்பி வந்தார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு சூரிய சக்­தி­யால் இயங்­கும் இ-­ரிக்­ஷாக்­களை ஆயிரம் பேருக்கு வழங்­கினார். இதை­ய­டுத்து பிர­த­மர் மோடி சம்­னே­காட் பகு­தி­யில் உள்ள 'ஜன­பி­ர­வாகா' எனும் கலாச்­சார மையத்­துக்கு சென்றார். அந்த மையத்தை சுற்றிப் பார்த்தார். இறு­தி­யாக பிர­த­மர் மோடி கங்கை நதிக்­கரை­யில் உள்ள அஸ்­சி­காட் பகு­திக்கு சென்றார்.