சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப்போவது அதிமுகவா? திமுகவா? என்று பந்தயம் கட்டுவதில் பெருமளவுக்குப் பணம் புழங்குகிறதாம். அதுபோல, குறிப்பிட்ட தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் பணம் கட்டப்படுகிறது. விரும் பிய கட்சியை வெற்றிபெறச் செய்ய அவர்கள் சமூக வலைத் தளங்களில் தீவிரமாக இயங்கி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியான நிலையில் சென்னையில் எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சூதாட்டத் தரகர்களை தேடி தேடுதல் வேட்டை நடத்தினர். சூதாட்டம் இப்போது உச்சத்தில் இருக்கும் என்பதால் நகரமெங்கும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் சூதாட்ட வேட்டை
1 mins read

