செம்மரக் கடத்தல்காரியை வளைத்து பிடிக்க தனிக்குழு அமைப்பு

செம்மரக் கடத்தல்காரியை வளைத்து பிடிக்க தனிக்குழு அமைப்பு

1 mins read

ஹைதராபாத்: செம்மரக் கடத்தலில் தொடர்புடைய விமானப் பணிப்பெண்ணான சங்கீதா என்பவரைக் கைது செய்ய ஆந்திர காவல்துறை தனிக்குழு அமைத்துள்ளது. செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட லட்சுமணன் என்பவர், தனது இரண்டாவது மனைவியான சங்கீதாவுக்கும் கடத்தலில் தொடர்புண்டு என வாக்குமூலம் அளித்தார். அதன் பேரில் கொல்கத்தாவில் இருந்த அவரை மேற்குவங்க போலிசார் கைது செய்தனர். எனினும் சங்கீதா பிணை பெற்றார். இந்நிலையில் அவரைக் கைது செய்ய ஆந்திர போலிசார் முயற்சித்து வருகின்றனர். இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.